திருப்பூரில் காதலிக்க வற்புறுத்தி தொல்லை செய்ததால் மனமுடைந்த சிறுமி விஷமருந்தி தற்கொலை : இருவர் கைது

திருப்பூர் : திருப்பூர் அருகே காதலிக்க வற்புறுத்தி தொல்லை செய்ததால் மனமுடைந்த 17 வயது சிறுமி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே காதலிக்க வற்புறுத்தி தொல்லை செய்ததால் மனமுடைந்த 17 வயது சிறுமி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (45), மஞ்சு (35) தம்பதியினர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்புக்காக திருப்பூர் மங்கலம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் நாச்சியம்மாள் காலனிக்கு குடியேறி உள்ளனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி (17) என்ற மகள் உள்ளார். இவர் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு நாச்சியம்மாள் காலனி பகுதியில் இருந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்த சிறுவனும் தன்னை அதிக வயதுடைய நபராக காட்டிக் கொண்டுள்ளார். இதனையடுத்து, கடந்த நான்கு மாதமாக பிரியதர்ஷினி அந்த சிறுவனின் செலவிற்கு பணம் கொடுத்துள்ளார். இதனிடையே, சிறுவனின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால், அவனிடமிருந்து பிரியதர்ஷினி விலகியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுவன் பலமுறை பிரியதர்ஷினி பணிபுரியும் இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பிரியதர்ஷினி உடன்படாததால் தனது நண்பர் மணிகண்டன் (22) என்பவரை உடன் அழைத்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி மிரட்டியுள்ளார். இதில், மனமுடைந்த சிறுமி சாணிபவுடர் கரைத்து குடித்து உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் மத்திய காவல்நிலைய போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து 16 வயது சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த மணிகண்டன் இருவரையும் கைது செய்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...