திருப்பூர் : திருப்பூர் அருகே காதலிக்க வற்புறுத்தி தொல்லை செய்ததால் மனமுடைந்த 17 வயது சிறுமி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே காதலிக்க வற்புறுத்தி தொல்லை செய்ததால் மனமுடைந்த 17 வயது சிறுமி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (45), மஞ்சு (35) தம்பதியினர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்புக்காக திருப்பூர் மங்கலம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் நாச்சியம்மாள் காலனிக்கு குடியேறி உள்ளனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி (17) என்ற மகள் உள்ளார். இவர் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு நாச்சியம்மாள் காலனி பகுதியில் இருந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த சிறுவனும் தன்னை அதிக வயதுடைய நபராக காட்டிக் கொண்டுள்ளார். இதனையடுத்து, கடந்த நான்கு மாதமாக பிரியதர்ஷினி அந்த சிறுவனின் செலவிற்கு பணம் கொடுத்துள்ளார். இதனிடையே, சிறுவனின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால், அவனிடமிருந்து பிரியதர்ஷினி விலகியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுவன் பலமுறை பிரியதர்ஷினி பணிபுரியும் இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பிரியதர்ஷினி உடன்படாததால் தனது நண்பர் மணிகண்டன் (22) என்பவரை உடன் அழைத்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி மிரட்டியுள்ளார். இதில், மனமுடைந்த சிறுமி சாணிபவுடர் கரைத்து குடித்து உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் மத்திய காவல்நிலைய போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து 16 வயது சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த மணிகண்டன் இருவரையும் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (45), மஞ்சு (35) தம்பதியினர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்புக்காக திருப்பூர் மங்கலம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் நாச்சியம்மாள் காலனிக்கு குடியேறி உள்ளனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி (17) என்ற மகள் உள்ளார். இவர் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு நாச்சியம்மாள் காலனி பகுதியில் இருந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த சிறுவனும் தன்னை அதிக வயதுடைய நபராக காட்டிக் கொண்டுள்ளார். இதனையடுத்து, கடந்த நான்கு மாதமாக பிரியதர்ஷினி அந்த சிறுவனின் செலவிற்கு பணம் கொடுத்துள்ளார். இதனிடையே, சிறுவனின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால், அவனிடமிருந்து பிரியதர்ஷினி விலகியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுவன் பலமுறை பிரியதர்ஷினி பணிபுரியும் இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பிரியதர்ஷினி உடன்படாததால் தனது நண்பர் மணிகண்டன் (22) என்பவரை உடன் அழைத்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி மிரட்டியுள்ளார். இதில், மனமுடைந்த சிறுமி சாணிபவுடர் கரைத்து குடித்து உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் மத்திய காவல்நிலைய போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து 16 வயது சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த மணிகண்டன் இருவரையும் கைது செய்தனர்.