குன்னூரில் திருட்டு வழக்கில் கணவர் கைது : மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை

நீலகிரி : குன்னூரில் கணவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதால், மனம் உடைந்த மனைவி தீக்குளித்து இறந்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : குன்னூரில் கணவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதால், மனம் உடைந்த மனைவி தீக்குளித்து இறந்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வசம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரமேஷ் (40), சீமா(35). இவர்களுக்கு விஜயலட்சுமி, அமுத கண்ணன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அமுதகண்ணனுக்கு பிறவியிலிருந்தே வாய் பேசமுடியாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. ரமேஷ் கடந்த 3 தினங்களுக்கு முன்பு குன்னூர் அருகேயுள்ள சோகத்தொரை பகுதியில் உள்ள கோவிலில் புகுந்து திருடிய சம்பவத்தில் ரமேஷ் உட்பவசம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் ஜெகதீஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் வரை திருட்டு சம்பவத்தில் ஈடுபடாத ரமேஷ், திருட்டில் ஈடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்டதால், அவருடைய மனைவி சீமா மிகுந்த கவலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.



மேலும், அவரை ஜாமீன் எடுக்கக் கூட கையில் பணம் இல்லாமலும், மேலும் இவர்க‌ளுடைய மகன் வாய்ப்பேச முடியாமல் இருந்ததால் கடுமையான மன உளைச்சலில் சீமா இருந்துள்ளார். இதனால் இன்று காலை சீமா உடலில் மண்ணெண்னெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்பதற்குள் அவர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருவங்காடு போலீசார், சீ‌மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...