நீலகிரி : குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் அதிகம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குன்னூரில் அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மதியம் விட்டு விட்டு மழைப் பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து காணபட்டது. இதன் காரணமாக லேம்ஸ்ராக், டால்பினோஸ் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மழையின் காரணமாக நகரில் குளிர் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் அதிகம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குன்னூரில் அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மதியம் விட்டு விட்டு மழைப் பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து காணபட்டது. இதன் காரணமாக லேம்ஸ்ராக், டால்பினோஸ் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மழையின் காரணமாக நகரில் குளிர் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
