குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி : குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் அதிகம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குன்னூரில் அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மதியம் விட்டு விட்டு மழைப் பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து காணபட்டது. இதன் காரணமாக லேம்ஸ்ராக், டால்பினோஸ் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மழையின் காரணமாக நகரில் குளிர் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...