நீலகிரி கோடை விழா கொண்டாட்டத்தில் மரவியல் பூங்காவையும் சேர்க்க வலியுறுத்தல்

நீலகிரி : உதகையில் சுற்றுலாப் பயணிகளின் பார்வையில் படாமல் உள்ள மரவியல் பூங்காவில், கோடை விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி : உதகையில் சுற்றுலாப் பயணிகளின் பார்வையில் படாமல் உள்ள மரவியல் பூங்காவில், கோடை விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரிய வகை மரம், செடி, கொடிகள் மற்றும் சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ளும் நோக்கில், 1992-ல் மரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. இங்கு, ஏராளமான வகை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள சதுப்பு நிலப் பகுதியில், பறவை, வண்ணத்துப்பூச்சி என ஆயிரக்கணக்கான சிறு பறவையினங்கள் சிறகடிப்பது, சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.



இப்பூங்கா குறித்து போதிய விளம்பரம் இல்லாததால், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளில், சில பேர் கூட மரவியல் பூங்காவுக்கு வந்து செல்வதில்லை. இந்நிலையை மாற்ற, கோடை விழாவின் ஒரு சில நிகழ்ச்சிகளை மரவியல் பூங்காவில் நடத்த தோட்டக்கலை துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, மரவியல் பூங்கா செல்லும் சாலையில் உள்ள மீன் காட்சியகம், மான் பூங்காவை பிரபலப்படுத்தவும் நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...