கோவை : கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசிய முழு உரையையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை : கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசிய முழு உரையையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அண்மையில் அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் ஆற்றிய உரையை பிரிவினைவாதத்தை தூண்டுகிற சில அரசியல் கட்சிகள் திரித்தும், திசை மாற்றியும் விசமப்பிரச்சாரம் செய்து வருகின்றன. தலைவர் கமல்ஹாசனின் கருத்துக்களை இந்துக்களுக்கு எதிராக கட்டமைத்து, அதன்மூலமாக தங்களின் பொய் பிரச்சாரத்திற்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில விசமிகள் புரட்டுவாதத்தினை பரப்பி வருகின்றனர்.
அரவக்குறிச்சியில் பேசிய தலைவர் கமல்ஹாசன், தீவிரவாதம் எந்த மதத்தினாலும், எந்த வடிவத்தினாலும் முன்னெடுக்கப்பட்டால், அது வன்மையாக கண்டிக்க வேண்டியது. ஒவ்வொரு குடிமகனும் ஒருங்கிணைந்து, ஒன்றிணைந்து வாழ்வதற்கு ஏற்ற சமூகம் அமைந்திட வேண்டும், என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
எனவே, உண்மையை வெளிக் கொண்டு வரும் ஊடகங்கள், அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசிய முழு உரையையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும், இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.