சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார்.
சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பள்ளபட்டி அண்ணா நகரில் அவர் பேசும்போது, சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் என சாடினார். கமலின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும். யாரை திருப்திப்படுத்த கமல் இவ்வாறு பேசி வருகிறார். யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கூறினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பள்ளபட்டி அண்ணா நகரில் அவர் பேசும்போது, சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் என சாடினார். கமலின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும். யாரை திருப்திப்படுத்த கமல் இவ்வாறு பேசி வருகிறார். யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கூறினார்.