காவிரி பிரச்னையை தீர்க்க உமாபாரதி உண்ணாவிரதம்

புதுடில்லி: கர்நாடகா - தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இருப்பினும் இரு மாநிலங்களுடன் மத்திய அரசு நடத்திய இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் காவிரி பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் உமா பாரதி, காவிரி பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படுவதற்காகவும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பதற்றத்தை தணிப்பதற்காகவும் தேவைப்பட்டால் இருமாநில எல்லையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன். இரு மாநிலங்களுக்கு இடையே ஏதாவது மோதல் என தகவல் வந்தால், அமைதியை ஏற்படுத்த உண்ணா விரதம் இருப்பேன் என்றார். மேலும், இரு மாநிலங்களும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளன.

இதனை இந்திய அட்டர்னி ஜெனரல் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது வழியிலோ காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்காக மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என உமாபாரதி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...