இந்தியா - பாகிஸ்தான், விமான போக்குவரத்து நிறுத்தம்?

புதுடில்லி: யூரி தாக்குதல், சிந்து நதி ஒப்பந்த விவகாரம் ஆகியவற்றிற்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நேரடி விமான போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது பாகிஸ்தான், எல்லைக்குள் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளிடையே இயக்கப்படும் விமான போக்குவரத்து தொடர்பான விபரங்களை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கலாம் அல்லது தாழ்வாக பறக்க அனுமதி வழங்கலாமா என்பது குறித்து விமான போக்குவரத்து துறையிடம், பிரதமர் அலுவலகம் கருத்து கேட்டுள்ளது. விமான போக்குவரத்து துறையும் அனைத்து விபரங்களை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது.

பாகிஸ்தான், விமானங்களுக்கு அனுமதி அளிக்கலாமா அல்லது தடை விதிக்கலாமா என்பது குறித்த இறுதி முடிவை பிரதமர் அலுவலகம் தான் எடுக்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் 2001ம் ஆண்டு, இந்திய பார்லி., கட்டிடம் மீதான தாக்குதலின் போது இரு நாடுகளிடையே விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...