இந்தியா - பாகிஸ்தான், விமான போக்குவரத்து நிறுத்தம்?

புதுடில்லி: யூரி தாக்குதல், சிந்து நதி ஒப்பந்த விவகாரம் ஆகியவற்றிற்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நேரடி விமான போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது பாகிஸ்தான், எல்லைக்குள் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளிடையே இயக்கப்படும் விமான போக்குவரத்து தொடர்பான விபரங்களை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கலாம் அல்லது தாழ்வாக பறக்க அனுமதி வழங்கலாமா என்பது குறித்து விமான போக்குவரத்து துறையிடம், பிரதமர் அலுவலகம் கருத்து கேட்டுள்ளது. விமான போக்குவரத்து துறையும் அனைத்து விபரங்களை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது.

பாகிஸ்தான், விமானங்களுக்கு அனுமதி அளிக்கலாமா அல்லது தடை விதிக்கலாமா என்பது குறித்த இறுதி முடிவை பிரதமர் அலுவலகம் தான் எடுக்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் 2001ம் ஆண்டு, இந்திய பார்லி., கட்டிடம் மீதான தாக்குதலின் போது இரு நாடுகளிடையே விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...