தமிழகத்தில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி..? : காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா.எஸ் ஜெயகுமார் பேட்டி

கோவை : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில், ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வலியுறுத்துப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா.எஸ் ஜெயகுமார் கூறியுள்ளார்.

கோவை : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில், ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வலியுறுத்துப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா.எஸ் ஜெயகுமார் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பி.ஆர். நடராஜன் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ நா.கார்த்திக் ஆகியோரோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா.எஸ் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது :- பா.ஜ.க ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக வளர்ச்சி பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சுயநலத்தில் உருவாகியுள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக, தி.மு.க. தலைமையில் தமிழகத்தில் கூட்டணி உருவாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து கோவையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர். நடராஜனுக்காக மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளோம். எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க. வேட்பாளரை விட 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில், பி.ஆர்.நடராஜனை வெற்றிபெறுவது உறுதி. 

இதற்கு முன்னர் பல தேர்தல்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் இந்திரா காந்தி தென் மாநிலங்களின் பல தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். அதேபோல், மத்தியில் தமிழகம் முக்கியத்துவம் பெரும் வகையில், தமிழகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட மேலிடத்திற்கு வலியுறுத்தியுள்ளோம். கண்டிப்பாக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என நம்புகிறோம், என்றார்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...