கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் தொடங்கி வைத்தார். நிலத்தடி நீர் வள மேம்பாடு, அடர்வனம் உருவாக்கம் மற்றும் தீவனப் பயிர் வளர்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.


Coimbatore:

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டம்பட்டி ஊராட்சியில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கிரியப்பனார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்பாபு, ராஜேஸ்குமார், சரவணன், கலாராணி, வாட்டர் டெக் நிறுவனத்தின் தலைமை மனிதவள நிர்வாக அலுவலர் லயோனல் பால் டேவிட், தனியார் தொண்டு நிறுவனப் பணியாளர்கள், அலுவலர்கள், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக கொண்டம்பட்டியில் அடர்வனம் உருவாக்கும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வாட்டர் டெக் நிறுவனத்தின் பங்களிப்புடன் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், பயன்பாடின்றி இருந்த ஆழ்துளைக் கிணறுகளை மீளச் செயல்படுத்தும் கட்டமைப்புகள் மற்றும் புதிய நீர்வள வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முன்பு பயன்பாடின்றி இருந்த நிலப்பரப்பு சுற்றுச்சூழலுக்கு பயனுள்ள பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மரக்கன்றுகளின் வளர்ச்சிக்குத் தேவையான நீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களும் வளர்க்கப்படவுள்ளன. அவை இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வளர்ச்சியையும் தொடர்ந்து கண்காணித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாபாளையம் ஊராட்சியின் தேகாணி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 3.55 ஏக்கரில் தூர்வாரப்பட்ட குளத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் நிலத்தடி நீர் வள மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...