கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்டு, அதிலிருந்து 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே இன்று காலை ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மினி லாரி ஒன்றை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது நடத்தப்பட்ட சோதனையில், மினி லாரியில் சுமார் 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையில், லாரியில் இருந்ததாகக் கூறப்படும் மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 54-வது வார்டு கொங்கு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், சம்பவம் தொடர்பாக நேரில் பார்வையிட்டார்.

பிடிபட்ட மினி லாரி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடியவர்கள் யார், ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபர்களை அடையாளம் காணும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...