"மிஸ் போகாதீங்க மிஸ்": மீண்டும் ஒரு பாசப்போராட்டம் நடத்திய பள்ளி குழந்தைகள்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை இசபெல்லா ஜூலியின் இடமாற்றத்தை எதிர்த்து அந்த அப்பள்ளி மாணவர்கள் அழுது பாச போராட்டத்தை நடத்தினர்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை இசபெல்லா ஜூலியின் இடமாற்றத்தை எதிர்த்து அந்த அப்பள்ளி மாணவர்கள் அழுது பாச போராட்டத்தை நடத்தினர்.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியகரம் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பகவான் இடமாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, அழுது அவரை வெளியேற விடாமல் பாசப்போராட்டம் நடத்தினர்.

இதே போன்ற சம்பவம் தற்போது நாக்கை மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளது.

பொய்கைநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இங்கு பணியாற்றி வரும் இசபெல்லா ஜூலி என்ற ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வி அலுவலகம் உத்தரவிட்டது.

இந்த இடமாற்றத்துக்கு பள்ளி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெற்றோர்களுடன் இணைந்து திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் ஆசிரியர் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும் போராட்டம் நடத்தினர்.

இதே பள்ளியில் அவர் தொடர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்த மாணவர்கள் ஆசிரியையை சூழ்ந்து கொண்டு, "மிஸ் போகாதீங்க மிஸ்" என்று கூறி கதறி அழுதனர். இதைப் பார்த்த அந்த ஆசிரியையும் கண்ணீர் சிந்தினார்.

இந்த சூழலில், இசபெல்லா ஜூலி அதே பள்ளியில் சில காலத்துக்கு தொடருவார் என்ற வாய்மொழி உத்தரவை அம்மாவட்ட கல்வி அலுவலகம் பிறப்பித்துள்ளது.

மாணவர்களின் இந்த பாசப் போராட்டம் அப்பள்ளி ஆசியர்களையும், ஊர் மக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...