கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இந்து இளைஞர் முன்னணி கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் S. அஜித்குமார் தலைமையில் அரசு பள்ளிகள் மேம்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில், கோவை மாவட்டத்தில் அரசினர் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை ஆண், பெண் பள்ளிகள் என மொத்தம் 1212-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் பல இடங்களில் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்ற நிலையிலும் இருப்பதாகவும், இதனால் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில தொடக்கப் பள்ளிகளில் இன்னும் கழிவறை வசதி இல்லாத நிலை தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பல அரசு பள்ளிக் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதிகளில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி கட்டிடங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உடனடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், உயர்நிலைப் பள்ளிகளில் கணிப்பொறி, வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்வக உபகரணங்கள், விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளை அரசு சார்பில் நடத்த வேண்டும் என்றும், மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், கோவை கோட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், இந்து இளைஞர் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...