சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. ஐஜி ரம்யா பாரதி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை :
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோவை சூலூர் அருகேயுள்ள பள்ளபாளையம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் கார்த்திக் (33) மற்றும் மோகன்குமார் (30) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி அளித்த பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், இருவரையும் ஓராண்டு காலம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில் 10 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, தென்னைத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் பாரதிபுரத்தைச் சேர்ந்த மோகன்குமார் ஆகியோரை சூலூர் போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
இதில், போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்திக் மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிவுகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மோகன்குமார் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், இருவர்மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் ஜாமீனில் வெளியே வராமல் தடுக்கும் வகையில், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிந்துரை செய்தது.
அதன்பேரில், ரம்யா பாரதி அனுப்பிய பரிந்துரையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததோடு மட்டுமல்லாமல், விரைவாக குண்டர் சட்டத்தையும் பாய்ச்சிய கோவை காவல்துறையின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோவை சூலூர் அருகேயுள்ள பள்ளபாளையம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் கார்த்திக் (33) மற்றும் மோகன்குமார் (30) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி அளித்த பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், இருவரையும் ஓராண்டு காலம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில் 10 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, தென்னைத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் பாரதிபுரத்தைச் சேர்ந்த மோகன்குமார் ஆகியோரை சூலூர் போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
இதில், போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்திக் மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிவுகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மோகன்குமார் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், இருவர்மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் ஜாமீனில் வெளியே வராமல் தடுக்கும் வகையில், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிந்துரை செய்தது.
அதன்பேரில், ரம்யா பாரதி அனுப்பிய பரிந்துரையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததோடு மட்டுமல்லாமல், விரைவாக குண்டர் சட்டத்தையும் பாய்ச்சிய கோவை காவல்துறையின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.