கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல்ஏ விஜய பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய முதல்வருக்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டல பகுதிகளில் கைத்தறி, விசைத்தறி, நூல் உற்பத்தி உள்ளிட்ட ஏராளமான ஜவுளி சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், இப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ விஜய பாலாஜிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாநில செயலாளர் கந்தவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“தமிழகத்தில் 1.60 லட்சம் மின் இணைப்புகள் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள், ஒரு லட்சத்திற்கும் குறைவான கைத்தறிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தானியங்கி தறிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 2 கோடி மீட்டருக்கும் அதிகமான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு அமைச்சர் நியமிக்கும்போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ விஜய பாலாஜியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக நியமித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது. மேலும், கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய அமைச்சராக பொறுப்பேற்ற விஜய பாலாஜியை சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அப்போது ஜவுளித்துறை வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்” என தெரிவித்துள்ளனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...