கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல்ஏ விஜய பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய முதல்வருக்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டல பகுதிகளில் கைத்தறி, விசைத்தறி, நூல் உற்பத்தி உள்ளிட்ட ஏராளமான ஜவுளி சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், இப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ விஜய பாலாஜிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாநில செயலாளர் கந்தவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“தமிழகத்தில் 1.60 லட்சம் மின் இணைப்புகள் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள், ஒரு லட்சத்திற்கும் குறைவான கைத்தறிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தானியங்கி தறிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 2 கோடி மீட்டருக்கும் அதிகமான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு அமைச்சர் நியமிக்கும்போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ விஜய பாலாஜியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக நியமித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது. மேலும், கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய அமைச்சராக பொறுப்பேற்ற விஜய பாலாஜியை சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அப்போது ஜவுளித்துறை வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்” என தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...