நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் மலர் சாகுபடி செய்யக் கடன் வழங்கியதில் நிகழ்ந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ தீவிர விசாரணையை நடத்தி வருகிறது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் மலர் சாகுபடி செய்யக் கடன் வழங்கியதில் நிகழ்ந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ தீவிர விசாரணையை நடத்தி வருகிறது.
நீலகிரியில் தேயிலைக்கு மாற்றுப் பயிராக மலர் சாகுபடி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் 5% மானியத்தை வழங்குகின்றன. மேலும், வங்கிகள் மூலமும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய திட்டத்தின் மூலம் உதகையிலுள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியும் கடன் வழங்கி வருகிறது.

இக்கடன் பெறுவதற்காக கிரவுன் புளோரி டெக் என்ற அமைப்பின் உரிமையாளர் ராஜன் வங்கி மேலாளர் சிவகுமாரை அணுகி விவசாயிகளுக்கு மலர் சாகுபடிக்காக பசுமை குடில் அமைக்கக் கடன் கேட்டுள்ளார். இதற்கான ஆவணங்களையும் அவர் அளித்துள்ளார். அதன்படி, வங்கி விதிமுறைகளை மீறி 58 பேருக்கு ரூ.24.75 இலட்சம் கடன் வழங்கியுள்ளார். அதேவேளையில், கிரவுன் புளோரி டெக் மூலம் எந்த விவசாயும் பயனடையவில்லை என்றும், இதனால் வங்கிக்கு ரூ. 14.36 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
அதன்பேரில், இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கியின் முன்னாள் மேலாளர் சிவக்குமார் மற்றும் கிரவுன் புளோரி டெக் உரிமையாளர் ராஜன் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. இதுகுறித்து தற்போதைய மேலாளரிடம் கேட்ட பொழுது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.