மலர் சாகுபடி செய்யக் கடன் வழங்கியதில் மோசடி : சி.பி.ஐ., விசாரணை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் மலர் சாகுபடி செய்யக் கடன் வழங்கியதில் நிகழ்ந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ தீவிர விசாரணையை நடத்தி வருகிறது.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் மலர் சாகுபடி செய்யக் கடன் வழங்கியதில் நிகழ்ந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ தீவிர விசாரணையை நடத்தி வருகிறது. 

நீலகிரியில் தேயிலைக்கு மாற்றுப் பயிராக மலர் சாகுபடி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் 5% மானியத்தை வழங்குகின்றன. மேலும், வங்கிகள் மூலமும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய திட்டத்தின் மூலம் உதகையிலுள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியும் கடன் வழங்கி வருகிறது. 



இக்கடன் பெறுவதற்காக கிரவுன் புளோரி டெக் என்ற அமைப்பின் உரிமையாளர் ராஜன் வங்கி மேலாளர் சிவகுமாரை அணுகி விவசாயிகளுக்கு மலர் சாகுபடிக்காக பசுமை குடில் அமைக்கக் கடன் கேட்டுள்ளார். இதற்கான ஆவணங்களையும் அவர் அளித்துள்ளார். அதன்படி, வங்கி விதிமுறைகளை மீறி 58 பேருக்கு ரூ.24.75 இலட்சம் கடன் வழங்கியுள்ளார். அதேவேளையில், கிரவுன் புளோரி டெக் மூலம் எந்த விவசாயும் பயனடையவில்லை என்றும், இதனால் வங்கிக்கு ரூ. 14.36 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. 

அதன்பேரில், இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கியின் முன்னாள் மேலாளர் சிவக்குமார் மற்றும் கிரவுன் புளோரி டெக் உரிமையாளர் ராஜன் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. இதுகுறித்து தற்போதைய மேலாளரிடம் கேட்ட பொழுது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...