திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இறைச்சிக்காக மயிலை வேட்டையாடிய பைனான்சியர் உள்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இறைச்சிக்காக மயிலை வேட்டையாடிய பைனான்சியர் உள்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நடமாடும் விலங்குகள் மற்றும் பறவைகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்குப் புகார்கள் அடுத்தடுத்து வந்தன. இதையடுத்து, இந்த சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சின்னக்காமன்பட்டி அருகே வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், வேட்டையாடிய மயிலின் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த இருவரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழனிச்சாமி (60), பாபு (55) என்பது அவர்களது பெயர்கள் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, மயில் இறைச்சி, இறக்கைகள், துப்பாக்கிகள், விளக்குகள் போன்றவை பறிமுதல் செய்தனர்.

ஒட்டன்சத்திரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நடமாடும் விலங்குகள் மற்றும் பறவைகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்குப் புகார்கள் அடுத்தடுத்து வந்தன. இதையடுத்து, இந்த சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சின்னக்காமன்பட்டி அருகே வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், வேட்டையாடிய மயிலின் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த இருவரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழனிச்சாமி (60), பாபு (55) என்பது அவர்களது பெயர்கள் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, மயில் இறைச்சி, இறக்கைகள், துப்பாக்கிகள், விளக்குகள் போன்றவை பறிமுதல் செய்தனர்.
