திண்டுக்கல் அருகே மயிலை வேட்டையாடிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இறைச்சிக்காக மயிலை வேட்டையாடிய பைனான்சியர் உள்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இறைச்சிக்காக மயிலை வேட்டையாடிய பைனான்சியர் உள்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நடமாடும் விலங்குகள் மற்றும் பறவைகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்குப் புகார்கள் அடுத்தடுத்து வந்தன. இதையடுத்து, இந்த சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சின்னக்காமன்பட்டி அருகே வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், வேட்டையாடிய மயிலின் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த இருவரைக் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழனிச்சாமி (60), பாபு (55) என்பது அவர்களது பெயர்கள் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, மயில் இறைச்சி, இறக்கைகள், துப்பாக்கிகள், விளக்குகள் போன்றவை பறிமுதல் செய்தனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...