கோவை: சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் கையெழுத்திட்டுள்ள குடிநீர் விநியோக ஒப்பந்த்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் கையெழுத்திட்டுள்ள குடிநீர் விநியோக ஒப்பந்த்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க., சார்பில் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.

கோவையைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணி, சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதை பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும், சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ஜனநாயக ரீதியாக போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ., கார்த்திக் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க., சார்பில் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.

கோவையைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணி, சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதை பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும், சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ஜனநாயக ரீதியாக போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ., கார்த்திக் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
