கோவை: கோவையில் பணத்திற்காக பூ வியாபாரியைக் கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் பணத்திற்காக பூ வியாபாரியைக் கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆர்.எஸ்.புரம் லிங்கப்பச்செட்டி வீதியைச் சேர்ந்த பூ வியாபாரி விஷ்ணுராஜ்(38) என்பவரை கடந்த மாதம் 30-ம் தேதி மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். அவரிடம் இருந்து ரூ.1.62,000 பணத்தை பறித்துக் கொண்ட கும்பல், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக தாக்கிவிட்டு, இறக்கிவிட்டுச் சென்றனர். இதையடுத்து, விஷ்ணுராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் கே. பெரியய்யா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளான சந்தோஷ் (22), தினகரன் (33), சதாம் உசேன் (23), நாகராஜ் (26), அரவிந்த் (23), ஹரிபிராத் (19) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து குற்ற வழக்கில் தொடர்புடைய சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தங்களது குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆர்.எஸ்.புரம் லிங்கப்பச்செட்டி வீதியைச் சேர்ந்த பூ வியாபாரி விஷ்ணுராஜ்(38) என்பவரை கடந்த மாதம் 30-ம் தேதி மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். அவரிடம் இருந்து ரூ.1.62,000 பணத்தை பறித்துக் கொண்ட கும்பல், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக தாக்கிவிட்டு, இறக்கிவிட்டுச் சென்றனர். இதையடுத்து, விஷ்ணுராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் கே. பெரியய்யா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளான சந்தோஷ் (22), தினகரன் (33), சதாம் உசேன் (23), நாகராஜ் (26), அரவிந்த் (23), ஹரிபிராத் (19) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து குற்ற வழக்கில் தொடர்புடைய சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தங்களது குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.