பணத்திற்காக கோவையைச் சேர்ந்த பூவியாபாரியைக் கடத்திய கும்பல் கைது

கோவை: கோவையில் பணத்திற்காக பூ வியாபாரியைக் கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் பணத்திற்காக பூ வியாபாரியைக் கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆர்.எஸ்.புரம் லிங்கப்பச்செட்டி வீதியைச் சேர்ந்த பூ வியாபாரி விஷ்ணுராஜ்(38) என்பவரை கடந்த மாதம் 30-ம் தேதி மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். அவரிடம் இருந்து ரூ.1.62,000 பணத்தை பறித்துக் கொண்ட கும்பல், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக தாக்கிவிட்டு, இறக்கிவிட்டுச் சென்றனர். இதையடுத்து, விஷ்ணுராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் கே. பெரியய்யா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளான சந்தோஷ் (22), தினகரன் (33), சதாம் உசேன் (23), நாகராஜ் (26), அரவிந்த் (23), ஹரிபிராத் (19) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து குற்ற வழக்கில் தொடர்புடைய சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தங்களது குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...