முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கு : நால்வருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

திருப்பூர்: திருப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 



கருமாரம்பாளையத்தில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்த தொழிலதிபரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினருமான சிவமூர்த்தி கடந்த 25-ம் தேதி மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சிவமூர்த்தியின் காரில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் ஆம்பூர் அருகே விமல், கௌதம், மணிபாரதி மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இந்த வழக்கில் தொடர்புடைய காரமடையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். 



இதனையடுத்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் கல்லை கட்டி வீசப்பட்டிருந்த சிவமூர்த்தியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு போலீசார், கைது செய்யப்பட்ட நால்வரையும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி கவியரசு உத்தரவிட்டார். அதன்படி நான்கு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...