திருப்பூர்: திருப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கருமாரம்பாளையத்தில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்த தொழிலதிபரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினருமான சிவமூர்த்தி கடந்த 25-ம் தேதி மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சிவமூர்த்தியின் காரில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் ஆம்பூர் அருகே விமல், கௌதம், மணிபாரதி மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இந்த வழக்கில் தொடர்புடைய காரமடையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் கல்லை கட்டி வீசப்பட்டிருந்த சிவமூர்த்தியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு போலீசார், கைது செய்யப்பட்ட நால்வரையும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி கவியரசு உத்தரவிட்டார். அதன்படி நான்கு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


கருமாரம்பாளையத்தில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்த தொழிலதிபரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினருமான சிவமூர்த்தி கடந்த 25-ம் தேதி மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சிவமூர்த்தியின் காரில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் ஆம்பூர் அருகே விமல், கௌதம், மணிபாரதி மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இந்த வழக்கில் தொடர்புடைய காரமடையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் கல்லை கட்டி வீசப்பட்டிருந்த சிவமூர்த்தியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு போலீசார், கைது செய்யப்பட்ட நால்வரையும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி கவியரசு உத்தரவிட்டார். அதன்படி நான்கு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
