யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக் கழக மானிய குழுவுக்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையத்தை உருவாக்கவதற்கான வரைவு சட்டத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக் கழக மானிய குழுவுக்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையத்தை உருவாக்கவதற்கான வரைவு சட்டத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
பல்கலைக் கழகங்களை மேம்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் ‘பல்கலைக் கழக மானியக் குழு’ (யுஜிசி) உருவாக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களை ஒழுங்குமுறை செய்வது, அவற்றுக்குத் தேவையான நிதியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த மானியக் குழு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், யு.ஜி.சி.க்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார்.
இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்படும். இதற்காக, பல்கலைக் கழக மானியக் குழு சட்டம் -1951 கலைக்கப்பட்டு, உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு சட்டத்தை பற்றிய கருத்துகளை கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அடுத்த மாதம் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம்," எனக் கூறியுள்ளார்.
பல்கலைக் கழகங்களை மேம்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் ‘பல்கலைக் கழக மானியக் குழு’ (யுஜிசி) உருவாக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களை ஒழுங்குமுறை செய்வது, அவற்றுக்குத் தேவையான நிதியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த மானியக் குழு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், யு.ஜி.சி.க்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார்.
இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்படும். இதற்காக, பல்கலைக் கழக மானியக் குழு சட்டம் -1951 கலைக்கப்பட்டு, உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு சட்டத்தை பற்றிய கருத்துகளை கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அடுத்த மாதம் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம்," எனக் கூறியுள்ளார்.