கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் விஷ வாயு தாக்கி பலி

கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த இவர், தனியாக துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில், இன்று காலை காந்திபுரம் நூறடி சாலையில் 9-வது வீதியில் மாணிக்கவாசகம் என்ற இந்தியன் வங்கி மேலாளரின் வீட்டில் துப்புரவு பணிக்காக மகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் சென்றனர். அப்போது கழிவு நீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்தார். 



இதையடுத்து, மகேந்திரனின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.மாநகராட்சி பணியாளர்களுக்கு பதிலாக பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ததே உயிரிழப்பிற்கு காரணமெனவும், இப்பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் தெரிவித்தனர். 

குறைவான தொகைக்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய தனியார் துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்தப்படுவதாகவும், இதனை தவிர்க்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது தொடர்பான, செய்திகளுக்கு கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யவும்: http://simpli-city.in/theatre-detail.php?id=507

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...