கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


கோவை: இஸ்லாமியர்களின் புனித ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹாலில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ஒன்றாகக் கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.




இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக இந்த ஈகை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.






இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி என்று அழைக்கப்படும் இறைச்சிகளை தானமாக வழங்குவார்கள். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தவாறு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு தானங்களை வழங்குவார்கள். மேலும் சிறப்பு தொழுகையும் நடைபெறும்.




அதன்படி இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜாக் அமைப்பினர் உலகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஜாக் அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹாலில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ஒன்றாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.






இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொழுகையில் கலந்து கொண்டனர். மக்கள் நலமுடன் வாழ வேண்டும், உலகம் அமைதி பெற வேண்டும், அனைவரிடமும் ஈகை பண்பானது மலர வேண்டும் என்று இறைவனை வேண்டி தொழுகை மேற்கொண்டனர்.




நபிகளின் தியாக உணர்வை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்ச்சியில் திளைத்தனர். கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...