கோவை மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு 3 மாதம் சம்பளம் பாக்கி

கோவை: மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மற்றும் கூடலூர் வனக்கோட்டங்களுக்கு 2 வனப் பாதுகாப்புக் குழுவை நியமனம் செய்து கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தக் குழு, சட்டவிரோதமாக வேட்டையாடுதல் மற்றும் யானைகள் ஊடுருவலைத் தடுத்து வந்தனர். அவர்களுக்கு, கடந்த மார்ச் முன்பு 10 பேர் அடங்கிய கோவை கோட்டத்திற்குட்பட்ட வனத்துறையினரின் அதிவிரைவுப் படையினருக்கு தமிழக அரசு ரூ. 89 லட்சம் ஒதுக்கியது. வனத்துறைக்கான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு வேட்டைத் தடுப்புக் குழு பயிற்சி அளிக்கிறது. 

இந்த நிலையில், நிதிப்பற்றாக்குறையால் நடப்பு நிதியாண்டுக்கான மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு ஊதியம் நிலுவையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் வனத்துறையினருக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஒப்பிடும் போது, கோவை வனத்துறையினருக்கு வெறும் ரூ. 8,500 மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறுகின்றனர். இதனிடையே, நிலுவையில் உள்ள தொகை வரும் ஜுன் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...