டெல்லி: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி விமலாவுக்கு பதில் சத்யநாராயணா-வை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
டெல்லி: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி விமலாவுக்கு பதில் சத்யநாராயணா-வை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அவ்வாறு, நீதிபதியாக விமலா அறிவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தால் காலதாமதமாகும் என்பதாலும், உரிய நீதி கிடைக்காது என்பதாலும், சுப்ரீம் கோர்ட்டு இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேரும் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
அதேநேரம் தமிழக அரசு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணா-வை பரிந்துரை செய்தது.
மேலும், மூன்றாவது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், நீதிபதிகள் மீது இதுபோன்று குற்றச்சாட்டு மனுவை இனி தாக்கல் செய்யக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்த 17 பேருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அவ்வாறு, நீதிபதியாக விமலா அறிவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தால் காலதாமதமாகும் என்பதாலும், உரிய நீதி கிடைக்காது என்பதாலும், சுப்ரீம் கோர்ட்டு இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேரும் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
அதேநேரம் தமிழக அரசு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணா-வை பரிந்துரை செய்தது.
மேலும், மூன்றாவது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், நீதிபதிகள் மீது இதுபோன்று குற்றச்சாட்டு மனுவை இனி தாக்கல் செய்யக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்த 17 பேருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.