எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: மூன்றாவது நீதிபதியை மாற்றியது உச்ச நீதிமன்றம்

டெல்லி: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி விமலாவுக்கு பதில் சத்யநாராயணா-வை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

டெல்லி: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி விமலாவுக்கு பதில் சத்யநாராயணா-வை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அவ்வாறு, நீதிபதியாக விமலா அறிவிக்கப்பட்டார்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தால் காலதாமதமாகும் என்பதாலும், உரிய நீதி கிடைக்காது என்பதாலும்,  சுப்ரீம் கோர்ட்டு இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேரும் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். 

அதேநேரம் தமிழக அரசு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணா-வை பரிந்துரை செய்தது. 

மேலும், மூன்றாவது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், நீதிபதிகள் மீது இதுபோன்று குற்றச்சாட்டு மனுவை இனி தாக்கல் செய்யக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்த 17 பேருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...