நீலகிரி: கூடலூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி: கூடலூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கூடலூர் டி.கே.பேட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து வந்த அன்சத், ஆசிக் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆசிக் என்பவர் மீது முன்னதாகவே கஞ்சா விற்பனை வழக்கு உள்ளதாகத் தெரிகிறது. மேலும், அன்சத் என்பவர் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடலூர் டி.கே.பேட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து வந்த அன்சத், ஆசிக் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆசிக் என்பவர் மீது முன்னதாகவே கஞ்சா விற்பனை வழக்கு உள்ளதாகத் தெரிகிறது. மேலும், அன்சத் என்பவர் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.