மந்தாடா விபத்தின்போது சிறப்பாக செயல்பட்ட பொதுமக்களுக்கு எஸ்.பி பாராட்டு

நீலகிரி : 9 பேரை பலி கொண்ட குன்னூர் பேருந்து விபத்தின் போது, மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்களை நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு தெரிவித்தார்.


நீலகிரி : 9 பேரை பலி கொண்ட குன்னூர் பேருந்து விபத்தின் போது, மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்களை நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு தெரிவித்தார். 



கடந்த சில நாட்களுக்கு முன் மந்தாடா குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடத்துநர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது, அருகில் இருந்த பொதுமக்கள், உயிரைப் பொருட்படுத்தாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், விபத்து நடந்த ஒருமணி நேரத்தில் மீட்பு பணிகள் முடிந்தது.



இந்த நிலையில், இந்தக் களப்பணியில் கலந்து கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரையும் பாராட்டிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, இது மகத்தான மனிதாபிமானம் கொண்ட நிகழ்வு என பலரையும் பாராட்டினார். மேலும், இவ்வளவு பெரிய விபத்து நடந்த போதும் அமைதியாக ஆத்மார்த்தமாக அனைவரும் மீட்பு பணிகள் ஈடுபட்டது மிகவும் பாராட்டுக்குரியது என்றார். இதைத்தொடர்ந்து, அவர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திருமேணி, கேத்தி காவல் ஆய்வாளர் விநாயகம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...