பல்லடம் அருகே மளிகை கடையில் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூர்: பல்லடம் அருகே மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.60,000 கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.60,000 கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நொச்சிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் செந்தில். அதே பகுதியில் கடந்த 15 வருடங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார். 



இந்நிலையில், நேற்று வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று கடையை திறந்த அவர் அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடைப்பதை பார்த்தார். மேலும், கடையில் இருந்த ரூ. 60,000 பணம் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரித்ததில் கடையின் மேற்கூரையைப் பிரித்து மர்ம நபர் கடைக்குள் உள்ளே இறங்கியது தெரிய வந்தது.

தொடர்ந்து, கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கடையின் உள்ளே இறங்கி திருடி சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...