ஆவாரம்பாளையம்-கணபதி மேம்பால பணிகளை தொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கோவை: ஆவாரம்பாளையம்-கணபதி இடையேயான மேம்பால பணிகளை தொடங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்ட குழுவினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: ஆவாரம்பாளையம்-கணபதி இடையேயான மேம்பால பணிகளை தொடங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்ட குழுவினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகரையும் கணபதி பகுதியையும் இணைக்கும் வகையில் ஆவாரம்பாளையம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், அங்கு மேம்பாலம் கட்ட ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து ரயில்வே துறை சார்பில் பணிகள் தொடங்கப்பட்டதால் அந்த சாலை மூடப்பட்டு மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கணபதி சென்று வருகின்றனர்.

ரயில்வே பால பணிகள் சுமார் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் அணுகு சாலை அமைக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து ஆவாரம்பாளையம் கணபதி ரயில்வே மேம்பால போராட்ட குழு சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது பேசிய போராட்ட குழு தலைவர் கோபால், "அணுகு சாலை அமைப்பதற்கு 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே பாதையின் இருபுறமும் சுமார் முக்கால் ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்காக 43 பயனாளிகள் நில ஆர்ஜிதம் செய்ய ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளனர். அவ்வாறு ஒப்புதல் வழங்கியவர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படாமலும், நிலம் கையகப்படுத்தாமலும் இருப்பதால் மேம்பால பணிகள் தாமதமாகிறது.

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம் போல இந்த பாலமும் பணிகள் தாமதமானால் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழக அரசு விரைந்து மேம்பால பணிகளை செய்ய வேண்டும்." என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...