கோவையில் மனநலம் பாதித்த மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தை

கோவை: தெப்பக்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாத வயதான தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தெப்பக்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாத வயதான தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெப்பக்குளம் அருகே உள்ள லிங்கப்ப செட்டி வீதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் முத்து. இவரது மனைவி வேலம்மாள். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததை அடுத்து, மகன் கணேசன் மற்றும் மகள் ராதாவை முத்து பராமரித்து வந்தார்.

நாற்பது வயதான கணேசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் கடந்த 20 வருடங்களாக வீட்டிலே வைத்து பராமரித்து வந்துள்ளனர். அவ்வப்போது கணேசன் ஆக்ரோசத்தோடு நடந்து கொண்டு, அவரது தந்தையை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு கணேசன் மீண்டும் ஆக்ரோசமாக நடந்து கொண்டார். அவரை கட்டுப்படுத்த முடியாத அவரது வயதான தந்தை, மயக்க மாத்திரைகளை கணேசனுக்கு கொடுத்து வீட்டில் இருந்த அம்மிக்கல்லை கணேசனின் தலையில் போட்டு கொலை செய்தார். 



அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஆர்.எஸ். புரம் போலீசார் கணேசனின் உடலை கைபற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், முத்துவை கைது செய்தனர்.



Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...