அதிகாரிகள் ரெய்டு: கோவையில் விற்பனைக்கு வைத்திருந்த பான்மசாலா, கலப்பட டீ தூள் பறிமுதல்

கோவை: கோவையில் உணவு பாதுகப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பான்மசாலா மற்றும் கலப்பட டீ தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவையில் உணவு பாதுகப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பான்மசாலா மற்றும் கலப்பட டீ தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்கள், பழக்கடைகள் மற்றும் குளிர்பான விற்பனையகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அவ்வாறு சோதனையின் போது தடைசெய்யப்பட்ட பொருட்கள், கலப்பட பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். கடந்த வாரம் அன்னூர் பகுதியில் நடத்திய சோதனையில் பிரபல சமையல் எண்ணெய் பெயரில் இயங்கி வந்த போலி எண்ணெய் நிறுவனத்தில் அதிரடி சோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர். 



இந்த நிலையில், இன்று உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் எட்டு அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து சூலூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். 

அங்குள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் நடத்திய சோதனையின் போது, 1.4 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட குட்கா மற்றும் பான்மசாலா, கலர் சில்லி பவுடர்கள், இரண்டு கிலோ கலப்பட டீ தூள், சேதமடைந்த பிஸ்கட்டுகள் மற்றும் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், இந்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 27 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த சோதனையானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...