திருப்பூரில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய 3 பெண்களுக்கு தர்மஅடி

திருப்பூர்: திருப்பூர் அருகே டையிங் நிறுவனத்தில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய பெண்களுக்கு தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே டையிங் நிறுவனத்தில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய பெண்களுக்கு தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். 

ஊத்துக்குளி சாலையில் உள்ள சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் சில பெண்கள் தோளில் சாக்குப்பையை மாட்டிக்கொண்டு கடந்த சில நாட்களாகக் குப்பை பொறுக்கி வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் பூட்டியிருந்த தனியாருக்கு சொந்தமான டையிங் நிறுவனத்துக்குள் ரகசியமாகப் புகுந்த 3 பெண்கள் அங்கிருந்த லேப்டாப், யு.பி.எஸ். பேட்டரி, மொபைல் போன் மின்மோட்டார் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை  திருடியுள்ளனர். 

பின்னர், அந்தப் பொருட்களை குப்பைகள் போல தோணியில் மூட்டைக் கட்டிக் கொண்டு, அருகே இருந்த சாக்கடை வாய்க்காலில் மறைத்து வைத்தனர். 

பின்னர், அவர்களுக்கு சொந்தமான ஆட்டோ ஒன்றை வரவழைத்து, அதில், கடத்தி வந்தப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டையிங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்தனர். அதற்கு, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தால், அவர்கள் ஏற்றிக்கொண்டிருந்த மூட்டைகளைப் பிரித்து பார்த்தனர். அதில், டையிங் நிறுவனத்தில் திருடிய பொருட்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



இது குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிந்ததையடுத்து, அங்கு ஒன்று திரண்ட பொதுமக்கள் அந்த திருட்டு கும்பலை சுற்றிவளைத்து தர்மஅடி கொடுத்தனர். மேலும், இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திருட்டு கும்பலைச் சேர்ந்த 3 பெண்களை கைது செய்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். 

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...