தி.மு.க ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி - மு.க.ஸ்டாலின்

தி.மு.க ஆட்சி அமைந்தால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க ஆட்சி அமைந்தால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தி.மு.க வைப் பொறுத்தவரையில் தமிழகத்தை 65 மாவட்டங்களாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அந்த 65 மாவட்டங்களில் நான்கு பேர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, சிறுபான்மையினருக்குத் தகுந்த மரியாதையை வழங்க தி. மு.க தவறியதில்லை. மதியம் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் துணைவியார் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றபோது, அவர் அன்பின் மிகுதியில், ``அடுத்த முறை வரும்போது முதலமை‌ச்ச‌ராகதான் வரணும்" என்றார்.

மேலும், ஒவ்வொரு அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு மாதந்தோறும் கமிஷன் வகையில் 10 கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. மேலும், நிறைய கல்லூரிகள் மற்றும் இடங்களை வாங்கிக் குவித்து வருகிறார்கள் என்கிற செய்திகள் வருகின்றன. அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வரும்போது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 4 பேர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...