பள்ளிக்கல்வித்துறையில் ஆசிய துணை கண்டமே திரும்பிப் பார்க்கும் வகையில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர்: ஆசிய துணை கண்டமே திரும்பி பார்க்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: ஆசிய துணை கண்டமே திரும்பி பார்க்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பல்லடம் தொகுதிகளுக்குட்பட்ட அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை மற்றும் பல்லடம் புதிய கல்வி மாவட்டமாக்கும் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆசிய துணை கண்டமே தமிழகக் கல்வித்துறையை திரும்பிப் பார்க்கின்ற வகையில் 12-ம் வகுப்பு முடித்தவுடனே வேலை வாய்ப்பு, அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் , 'கியூ.ஆர்' கோடுடன் கூடிய பாடப்புத்தகங்கள், 8-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வை-பை வசதி ஆகியவை செய்யப்படவுள்ளது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றியமைக்கப்படும், இவ்வாறு கூறினார்.



முகம் சுழிக்கும் பேச்சு:

முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது :- எஜமானருக்கு நன்றியுள்ள பிராணியாக உள்ள நாய் எப்படியோ, அதுபோல ஜெயலலிதாவிற்கு நன்றியுள்ளவராக உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்ததால் வீட்டுவசதித்துறையைப் பெற்றார். அதிலும், சிறப்பாக செயலாற்றினார், அதுபோல, தற்போதுள்ள கால்நடை பராமரிப்புத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார், என்றார். அரசு நிகழ்ச்சியில் பொதுமேடையில் சக அமைச்சரைப் பிராணியோடு ஒப்பிட்டு அமைச்சர் செங்கோட்டையன் பேசியது கட்சியினர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...