சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: 3 குடும்பத்தினர் தற்கொலை முயற்சி

தர்மபுரி: விவசாய நிலங்களை பாதிக்கும் சேலம் - சென்னை இடையிலான 8 வழி பசுமை சாலையை எதிர்த்து தர்மபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியில் 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தர்மபுரி: விவசாய நிலங்களை பாதிக்கும் சேலம் - சென்னை இடையிலான 8 வழி பசுமை சாலையை எதிர்த்து தர்மபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியில் 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் 277 கி.மீ., தொலைவில் புதிய 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சாலையால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள், வீடுகள், பாசன கிணறுகள் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கையகப்படுத்தப்படும் நிலங்களின் விபரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

எனவே, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பின் சார்பில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் அரசும் கடும் தீவிரம் காட்டிவருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் 8 வழி பசுமை விரைவுச்சாலை 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1,846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலங்களை அளவீடு செய்து, முட்டுக்கல் நடும் பணிகள் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சந்திரகுமாரின் என்பவரின் நிலத்தை அளந்த அதிகாரிகள் கற்களை நாட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரும், அவரது மனைவி மணி, மகன்கள் பாலன், தமிழரசன் மகள் சுபா ஆகியோர் உடலில் மண்ணெண்ணை ஊற்ற முயன்றனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவரின் குடும்பத்தினர் உள்பட 9 பேர் தீக்குளிக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது.

ஒரே நேரத்தில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அறிந்ததும், கிராம மக்கள் அப்பகுதியில் திரள ஆரம்பித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்வதை கைவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...