சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: 3 குடும்பத்தினர் தற்கொலை முயற்சி

தர்மபுரி: விவசாய நிலங்களை பாதிக்கும் சேலம் - சென்னை இடையிலான 8 வழி பசுமை சாலையை எதிர்த்து தர்மபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியில் 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தர்மபுரி: விவசாய நிலங்களை பாதிக்கும் சேலம் - சென்னை இடையிலான 8 வழி பசுமை சாலையை எதிர்த்து தர்மபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியில் 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் 277 கி.மீ., தொலைவில் புதிய 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சாலையால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள், வீடுகள், பாசன கிணறுகள் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கையகப்படுத்தப்படும் நிலங்களின் விபரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

எனவே, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பின் சார்பில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் அரசும் கடும் தீவிரம் காட்டிவருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் 8 வழி பசுமை விரைவுச்சாலை 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1,846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலங்களை அளவீடு செய்து, முட்டுக்கல் நடும் பணிகள் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சந்திரகுமாரின் என்பவரின் நிலத்தை அளந்த அதிகாரிகள் கற்களை நாட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரும், அவரது மனைவி மணி, மகன்கள் பாலன், தமிழரசன் மகள் சுபா ஆகியோர் உடலில் மண்ணெண்ணை ஊற்ற முயன்றனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவரின் குடும்பத்தினர் உள்பட 9 பேர் தீக்குளிக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது.

ஒரே நேரத்தில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அறிந்ததும், கிராம மக்கள் அப்பகுதியில் திரள ஆரம்பித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்வதை கைவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...