கோவை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கசிவினால் வெளியேறிய கந்தக அமிலம், கோவையில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது.
கோவை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கசிவினால் வெளியேறிய கந்தக அமிலம், கோவையில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கந்தக அமிலத்தை டிரக்குகள் மூலம் கொண்டு செல்லும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் கசிவதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. இதையடுத்து ஆய்வு நடத்தப்பட்டு, கந்தக அமிலக் கசிவு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், அவற்றை டேங்கர் லாரிகளில் சேகரிக்கும் பணிகளும் நேற்று தொடங்கியது. சேகரிக்கப்படும் கந்தக அமிலத்தை, அதனை பயன்படுத்தும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, உரியப் பாதுகாப்புடன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில், 4 லாரிகளில் 84 மெட்ரிக் டன் எடை கொண்ட கந்தக அமிலம் கோவையில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. 1,000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் ஸ்டெர்லைட் ஆலை சேமிப்பு கிடங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசு, முதற்கட்டமாக தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை துண்டித்தது. இதன் காரணமாக, போதிய பராமிரிப்பு செய்ய முடியாததால் கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கந்தக அமிலத்தை டிரக்குகள் மூலம் கொண்டு செல்லும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் கசிவதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. இதையடுத்து ஆய்வு நடத்தப்பட்டு, கந்தக அமிலக் கசிவு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், அவற்றை டேங்கர் லாரிகளில் சேகரிக்கும் பணிகளும் நேற்று தொடங்கியது. சேகரிக்கப்படும் கந்தக அமிலத்தை, அதனை பயன்படுத்தும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, உரியப் பாதுகாப்புடன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில், 4 லாரிகளில் 84 மெட்ரிக் டன் எடை கொண்ட கந்தக அமிலம் கோவையில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. 1,000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் ஸ்டெர்லைட் ஆலை சேமிப்பு கிடங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசு, முதற்கட்டமாக தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை துண்டித்தது. இதன் காரணமாக, போதிய பராமிரிப்பு செய்ய முடியாததால் கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.