கோவைக்குக் கொண்டு வரப்படும் ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக அமிலம்

கோவை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கசிவினால் வெளியேறிய கந்தக அமிலம், கோவையில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது.

கோவை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கசிவினால் வெளியேறிய கந்தக அமிலம், கோவையில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கந்தக அமிலத்தை டிரக்குகள் மூலம் கொண்டு செல்லும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் கசிவதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. இதையடுத்து ஆய்வு நடத்தப்பட்டு, கந்தக அமிலக் கசிவு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், அவற்றை டேங்கர் லாரிகளில் சேகரிக்கும் பணிகளும் நேற்று தொடங்கியது. சேகரிக்கப்படும் கந்தக அமிலத்தை, அதனை பயன்படுத்தும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, உரியப் பாதுகாப்புடன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், 4 லாரிகளில் 84 மெட்ரிக் டன் எடை கொண்ட கந்தக அமிலம் கோவையில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. 1,000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் ஸ்டெர்லைட் ஆலை சேமிப்பு கிடங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது​.



பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசு, முதற்கட்டமாக தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை துண்டித்தது. இதன் காரணமாக, போதிய பராமிரிப்பு செய்ய முடியாததால் கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...