வால்பாறையில் நால்வரை தாக்கிய சிறுத்தை சிக்கியது

கோவை: வால்பாறையில் வட்டாரத்தில் நால்வரை தாக்கியோடு, தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூடு வைத்து பிடித்தனர்.

கோவை: வால்பாறையில் வட்டாரத்தில் நால்வரை தாக்கியோடு, தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூடு வைத்து பிடித்தனர். 



கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாக சிறுத்தைப் புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. அந்த சிறுத்த இதுவரை நான்கு பேரை காயப்படுத்தியதோடு, ஒருவரை கொன்றது. இதன் காரணமாக வால்பாறையில் நேற்று  மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் வால்பாறையில் போக்குவரத்து முடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சின்கோனா பகுதி குடியிருப்பு உட்பட மூன்று இடத்தில் கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டது. மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க நவீன காமிரா பொருத்தப்பட்டது. 



இந்நிலையில், இன்று அதிகாலை சின்கோனாவில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தைப் புலி சிக்கியது. தொடர்ந்து சிறுத்தை சிக்கிய கூண்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அது, ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்று வனத்துறை மருத்துவர் மனோகரன் கூறியுள்ளார். 

தற்போது, சிறுத்தைப் புலி பிடிபட்டிருந்தாலும், மேலும், சில சிறுத்தைகள் சுற்றித் திரிவதால், வால்பாறையில் தொடர்ந்து, கூண்டு வைத்து கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...