கோவை: கோவை ரோட்டரி சங்கம் சார்பில் 'தொழில் வித்தகர் விருது' வழங்கும் விழா, கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.
கோவை: கோவை ரோட்டரி சங்கம் சார்பில் 'தொழில் வித்தகர் விருது' வழங்கும் விழா, கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கடந்த 30 ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டிலும், தனிமனித முன்னேற்றத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும், ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர், தமிழ் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு 'தொழில் வித்தகர் விருது' வழங்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கவுரவிக்கும் விதமாக கோவை ரோட்டரி சங்கம் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில், கவிஞர் கவிதாசன் பேசுகையில், "நெல்லிக்கணி என்ற இளைஞர் முன்னேற்ற திட்டத்தில் ரோட்டரி சங்கத்தோடு இணைந்து பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை இளைஞர்களோடும் மாணவர்களோடும் பகிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதற்காக அளிக்கப்பட்ட இந்த விருதை என்னோடு பயணிக்கும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், இலக்கிய துறையை சேர்ந்தவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலையிலும் இளைஞர்கள் முன்னேற தொடர்ந்து பணியாற்றுவேன்." என்றார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் A. பாரி, ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் K.ராமசாமி மற்றும் மாவட்ட தொழில் சேவை இயக்குனர் N.சுந்தரவடிவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ரோட்டரி சங்க தலைவர் சாண்டியாகோ ஜேசு, திட்ட தலைவர் டாக்டர்.சித்ரா மனோகர், செயலர் ஜ்யோதிஷ் N.பிள்ளை, தொழில் சேவை இயக்குனர் டாக்டர்.N.மகேந்திரன் ஆகியோர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், கடந்த 30 ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டிலும், தனிமனித முன்னேற்றத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும், ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர், தமிழ் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு 'தொழில் வித்தகர் விருது' வழங்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கவுரவிக்கும் விதமாக கோவை ரோட்டரி சங்கம் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில், கவிஞர் கவிதாசன் பேசுகையில், "நெல்லிக்கணி என்ற இளைஞர் முன்னேற்ற திட்டத்தில் ரோட்டரி சங்கத்தோடு இணைந்து பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை இளைஞர்களோடும் மாணவர்களோடும் பகிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதற்காக அளிக்கப்பட்ட இந்த விருதை என்னோடு பயணிக்கும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், இலக்கிய துறையை சேர்ந்தவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலையிலும் இளைஞர்கள் முன்னேற தொடர்ந்து பணியாற்றுவேன்." என்றார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் A. பாரி, ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் K.ராமசாமி மற்றும் மாவட்ட தொழில் சேவை இயக்குனர் N.சுந்தரவடிவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ரோட்டரி சங்க தலைவர் சாண்டியாகோ ஜேசு, திட்ட தலைவர் டாக்டர்.சித்ரா மனோகர், செயலர் ஜ்யோதிஷ் N.பிள்ளை, தொழில் சேவை இயக்குனர் டாக்டர்.N.மகேந்திரன் ஆகியோர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.