கவிஞர் கவிதாசனுக்கு 'தொழில் வித்தகர் விருது' வழங்கிய கோவை ரோட்டரி சங்கம்

கோவை: கோவை ரோட்டரி சங்கம் சார்பில் 'தொழில் வித்தகர் விருது' வழங்கும் விழா, கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.

கோவை: கோவை ரோட்டரி சங்கம் சார்பில் 'தொழில் வித்தகர் விருது' வழங்கும் விழா, கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், கடந்த 30 ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டிலும், தனிமனித முன்னேற்றத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும், ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர், தமிழ் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு 'தொழில் வித்தகர் விருது' வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கவுரவிக்கும் விதமாக கோவை ரோட்டரி சங்கம் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில், கவிஞர் கவிதாசன் பேசுகையில், "நெல்லிக்கணி என்ற இளைஞர் முன்னேற்ற திட்டத்தில் ரோட்டரி சங்கத்தோடு இணைந்து பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை இளைஞர்களோடும் மாணவர்களோடும் பகிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. 

அதற்காக அளிக்கப்பட்ட இந்த விருதை என்னோடு பயணிக்கும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், இலக்கிய துறையை சேர்ந்தவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலையிலும் இளைஞர்கள் முன்னேற தொடர்ந்து பணியாற்றுவேன்." என்றார்.



விருது வழங்கும் நிகழ்ச்சியில், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் A. பாரி, ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் K.ராமசாமி மற்றும் மாவட்ட தொழில் சேவை இயக்குனர் N.சுந்தரவடிவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

ரோட்டரி சங்க தலைவர் சாண்டியாகோ ஜேசு, திட்ட தலைவர் டாக்டர்.சித்ரா மனோகர், செயலர் ஜ்யோதிஷ் N.பிள்ளை, தொழில் சேவை இயக்குனர் டாக்டர்.N.மகேந்திரன் ஆகியோர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...