நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கூடலூரை அடுத்த வாச்சகொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்னன் (48). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடித்து பாடந்துரை பஜாரில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இரவு 7 மணியளவில் தனியாக வீடு திரும்பியுள்ளார். சுண்ட வயல் பகுதியில் சென்ற போது, அங்கு வந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவர், இறந்த விபரம் யாருக்கும் தெரியாத நிலையில், மறுநாள் காலையில் அந்த வழியாக வந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

பின்னர், வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினரிடம் கிராமவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ராதாகிருஷ்ணனின் உடலை எடுத்துச் செல்லவிடாமல் தடுத்தனர். யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை சமாதானப்படுத்திய வனத்துறையினர் மற்றும் போலீசார், உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, காட்டு யானை தாக்கியதில், உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் மனைவிக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்பட்டது.
கூடலூரை அடுத்த வாச்சகொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்னன் (48). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடித்து பாடந்துரை பஜாரில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இரவு 7 மணியளவில் தனியாக வீடு திரும்பியுள்ளார். சுண்ட வயல் பகுதியில் சென்ற போது, அங்கு வந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவர், இறந்த விபரம் யாருக்கும் தெரியாத நிலையில், மறுநாள் காலையில் அந்த வழியாக வந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

பின்னர், வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினரிடம் கிராமவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ராதாகிருஷ்ணனின் உடலை எடுத்துச் செல்லவிடாமல் தடுத்தனர். யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை சமாதானப்படுத்திய வனத்துறையினர் மற்றும் போலீசார், உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, காட்டு யானை தாக்கியதில், உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் மனைவிக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்பட்டது.