கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி : முதற்கட்டமாக ரூ. 50,000 இழப்பீடு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கூடலூரை அடுத்த வாச்சகொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்னன் (48). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடித்து பாடந்துரை பஜாரில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இரவு 7 மணியளவில் தனியாக வீடு திரும்பியுள்ளார். சுண்ட வயல் பகுதியில் சென்ற போது, அங்கு வந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவர், இறந்த விபரம் யாருக்கும் தெரியாத நிலையில், மறுநாள் காலையில் அந்த வழியாக வந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் அளித்துள்ளார்.



பின்னர், வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினரிடம் கிராமவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ராதாகிருஷ்ணனின் உடலை எடுத்துச் செல்லவிடாமல் தடுத்தனர். யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை சமாதானப்படுத்திய வனத்துறையினர் மற்றும் போலீசார், உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, காட்டு யானை தாக்கியதில், உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் மனைவிக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...