குடிநீர் கட்டணம் செலுத்தாத மாநகராட்சி நிர்வாகம்: குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: குடிநீர் கட்டணம் செலுத்தாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் பாரதி பார்க் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: குடிநீர் கட்டணம் செலுத்தாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் பாரதி பார்க் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல் படுத்த வேண்டும், குடிநீர் கட்டணமாக மாநகராட்சியால் செலுத்தப்பட வேண்டிய ரூ. 210 கோடி உடனடியாக வசூல் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., குடிநீர் வடிகால் சங்கத்தினர் பாரதி பார்க் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு இதுவரை ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரியம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ளதால் வாரியத்தின் சொந்த நிதியில் இருந்து நடைமுறைப்படுத்திக்கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணமாக உள்ளாட்சி அமைப்புகள் இதுவரை ரூ. 500 கோடி பாக்கி வைத்துள்ளது. இதில், கோவை மாநகராட்சி மட்டும் ரூ. 210 கோடி பாக்கி வைத்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் கோவை மாநகராட்சி சுமார் ரூ. 250 கோடி வரிவசூல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், உடனடியாக குடிநீர் வடிகால் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கிகளை வசூல் செய்ய வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளின் நிலுவை பாக்கிகளை விரைவில் வசூல் செய்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வேலைப்பளுவை உயர்த்தி ஆட்குறைப்பு செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு., தமிழ்நாடு வாட்டர் சப்ளை அண்டு ட்ரெயினேஜ் போர்டு வொர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உதவி தலைவர் பிரான்சிஸ், பொதுச்செயலாளர் ஆர்.சரவணன், பொருளாளர் கே.ஆர்.ராஜேந்திரன், சம்மேளன முன்னாள் தலைவர் பாலகுமார், உதவி செயலாளர் பெலிக்ஸ் மற்றும் குடிநீர் வடிகால் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...